Switch Language:   English | தமிழ்

    அதிசய ஓவியங்கள், கண்ணுக்கு புலப்படாத மனிதன்

    சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சீன கலைஞ்சரான லூ பொலின் என்ற ஓவியர் தனது உருவத்தை பிறரின் கண்களுக்கு புலப்படாதவாறு தத்ரூபமாக பல்வேறு தளங்களில் வரைந்து அனைவரினதும் கவனத்தி தன பக்கம் ஈர்த்துள்ளார்.

    பல்பொருள் அங்காடி, புத்தகச்சாலை, புகையிரத நிலையம் போன்ற பல்வேறுபட்ட இடங்களில் இவர் புலக்காட்சிக்கு தெரியாமல் நிற்கிறார். இவரது ஓவியங்களை கூர்ந்து கவனித்தால் அவரது உருவம் இருப்பதைக் காணலாம்.

    தனது முழு திறமையினையும் பயன்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். திறமைகளை எப்படியும் வெளிக்காட்ட முடியும் என்று இவரது ஓவியங்களால் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.