மருந்துகளை சாப்பாட்டுக்கு முன், பின் ஏன் சாப்பிட சொல்கிறார்கள்?
- Kaju
- Category: தகவல்கள்
- Hits: 89
சில மாத்திரைகளை உணவுக்கு முன்னும், சில மாத்திரைகளை உணவுக்குப் பின்னும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். அதற்குக் காரணம் நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் தான். நாம் சாப்பிடுவதற்கு முன்பு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பும் வீரியமும் அதிகமாக இருக்கும். உணவு உண்டபின் அதன் வீரியம் குறைவாக இருக்கும்.
பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்றுக் கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்கச் செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு மருந்தின் தன்மையைப் பொறுத்தே மருத்துவர் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன் சாப்பிடவும், சில மருந்துகளைச் சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடவும் அறிவுறுத்துகிறார். மருத்துவர்கள் ஏன் அப்படி சாப்பிட சொல்கிறார்கள் என்பதை பற்றி இங்கு காண்போம்.
சாப்பாட்டிற்குப் பிறகு :
சில மருந்துகளை நாம் உட்கொண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்றில் பிரச்சனை போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் உண்டாக்குகிறது. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிடவே மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல மாத்திரைகளைப் பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு இரசாயன மாற்றம் அடைந்து உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
சாப்பாட்டிற்கு முன் :
சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளைத் தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தண்ணீரில் கரைத்து :
சில மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். காரணம், மாத்திரை உணவுக்குழாயில் தங்கிவிடாமல் சிறுகுடல் பகுதிக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும் என்பதுதான். இல்லாதபட்சத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 கிளாஸ் தண்ணீராவது பருக வேண்டும். உணவுக்குழாயில் மாத்திரை தேங்கிவிட்டால் புண் உண்டாகிவிடலாம்