எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க...
- Kaju
- Category: தகவல்கள்
- Hits: 96
நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்வதற்கும் சரி, நாம் அலுவலகத்துக்கும் சரி லஞ்ச் எடுத்துச் செல்வதற்கு, கலர் கலராக பிளாஸ்டிக் பாக்ஸ்களையே பயன்படுத்துகிறோம். குழந்தைகளுக்கும் பொம்மைகளைக் காட்டி மனதை மயக்கி அதையே வாங்கித் தருகிறோம்.
அவர்களாகவே அடம்பிடித்தாலும் அதிலுள்ள தீமைகளைச் சொல்ல வேண்டிய நாம் அதை வாங்கிக் கொடுத்து ஆதரிக்கிறோம். அது என்ன அவ்வளவு பெரிய மகாபாதகமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த பாக்ஸ்கள் எந்த மாதிரி பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
பிளாஸ்டிக் தரம்
நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பெரும்பாலான பிளாஸ்டிக் பொருள்களில், BPA அல்லது Bisphenol - A என்ற பொருளின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும். இதிலுள்ள ரசாபயனப் பொருள்களின் கட்டமைப்பு என்பது பெண்களுக்கு சுரக்கும் பெண்மையின் சின்னமான ஈஸ்ட்ரஜோனைப் போன்றது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சூடான உணவுகள்
காலையில் சமைத்தவுடன் அவசர கதியில் சூடான உணவுகளை இந்த பிளாஸ்டிக் லஞ்ச் பாக்சஜல் வைக்கும்பொழுதும், மதியம் சாப்பிடும்போது, அதை அப்படியே மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடாக்கும்போதும், அதேபோல் சுடுதண்ணீரை, பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி வைக்கும்பொழுது, இந்த BPA வெளியேறி உணவிலும் தண்ணீரிலும் கலந்து விடுகிறது. பிறகு என்ன ஆகும்? என்பதை நாங்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்களுக்குத் தெரியும்.
தீர்வு
இதற்கு முன்பாக நாம் பயன்படுத்தி வந்த எவர் சில்வர் என்னும் உலோகத்தால் ஆன லஞ்ச் பாக்ஸ்களைப் பயன்படுத்தலாம். தண்ணீருக்கும் இப்போது எவர்சில்வர், செம்பு உலோகங்களால் ஆன வாட்டர் பாட்டில்கள் கிடைக்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம். அதேபோல் கண்ணாடி பாட்டில்களையும் நாம் பயன்படுத்தலாம்.
கட்டாயம்
இல்லை எனக்கு விதவிதமான பொம்மைகள் வரையப்படட பிளாஸ்டிக் பாக்ஸ்கள் தான் வேண்டும் என்று குழந்தைகள் அடம்பிடித்தால், BPA free என்று குறிப்பிடப்பட்ட பாடடில்களைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துங்கள். ஆனால் அது இந்தியாவில் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. அப்படியே கட்டாயமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவோராக இருநு்தால் மைக்ரோவேவ் அவனில் வைக்கவோ அல்லது பாட்டில்களில் வெந்நீர் ஊற்றிப் பயன்படுத்தவோ கூடாது.
கருவுற்ற பெண்கள்
கருவுற்ற பெண்கள் இந்த பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களின் வழியாக இந்த ரசாயனப் பொருள் குழந்தைக்குச் சென்று சேர்ந்து விடும்.