பிளாஸ்டிக் பைகளால் இவ்வளவு தீங்கா??
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 313
பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் “ஹைட்ரோகார்பன்” மற்றும் “பியூரான்”, ‘கார்சினோஜினிக்” போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன.
அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.அதுமட்டுமல்ளாமல்வயிற்றில் (ஸ்டொமக் கேன்சர்) ஜீன்களை தூண்டிவிடுகிறது.
மூளையில் சுரக்கும் சுரப்பியை மட்டுப்படுத்தி ஆண்மை குறைவை உண்டாக்குகிறது.இந்த அபாயம் புரியாமல்,பலரும் அவசர தேவைகளுக்காக சூடான உணவுப்பொருட்களை நேரடியாக பிளாஸ்டிக் கவர்களில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த அவசர உலகில் பிளாஸ்டிக்கை (பாலி வினை குல்லோரைட்) எல்லா இடங்களிலும் பயன் படுத்துகிறோம். எடுத்துச்செல்ல எளிதாக இருக்கும் என்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் “கேரி பேக்’களுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரம் பற்றி, பலருக்கும் புரிவதே இல்லை.
சாதாரண வெப்ப நிலையிலேயே (நம் அறையின் சுட்டிலேயே) நீரூடன் வினை புரியும் சக்தி பிளாஸ்டிக்குக்கு உண்டு
உதா.ம்:- (பிளாஸ்டிக் பாட்டிலில் பாதி அளவுக்கு தண்ண்நிர் நிறப்பி வைக்க, சாதாரண வெப்ப நிலையிலேயே இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பாட்டிலில் காலியாக உள்ள இடங்களில் நீர்துளிகள் ஆவியாகி படிந்து உள்ளதை பாருங்கள்).
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பெரும் பாலும் 20 மைக்ரானுக்கும் குறை வானவை. இவற்றை விற்பதும், வாங்குவதும், பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால்,நகரத்தில் இதன் விற்பனை யும், பயன்பாடும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. தடையை மீறி வாங்கும் நுகர்வோர் களும், அந்த பிளாஸ்டிக் டம்ளர் களை பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொள்ளாமல் பயன்படுத்தும் போது, அதன் ரசாயன தன்மை உடலுக்குள் சென்று விடுகிறது.
பாலிவினை குளோரைடு வேதிப்பொருள், மனித உடலுக்குள் சென்றால், தீங்கு விளைவிக்கும் ஓட்டல்களில் வாழ இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலை பார்சல் சாப்பாடு வாங்கினால் பிளாஸ்டிக் பேப்பர் பார்சல் என பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியாமல் செய்து நமது வாழ்நாளை குறைத்து விடுகின்றனர்.