கற்களின் தரம் அறிவது எப்படி?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 411
அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை.
இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்
முத்து : நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் : கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் : குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் : சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளம் : உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் : பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் : சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் : பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் : பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.