கனவுகளும், அவற்றிற்கான அர்த்தங்களும்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 348
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று காலம் காலமாக சொல்லப்படுவதுண்டு.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 –8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 –10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48– 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 –3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36-6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று 'பஞ்சாங்க சாஸ்திரம்' சொல்கிறதாம்.
நற்பலன் தரும் கனவுகள்
இறப்பு என்பது சோகமான விடயம் என்றாலும், அது கனவு காண்பர்களின் வாழ்வில் நிகழக்கூடிய பெரிய மாற்றத்தை குறிப்பிடுவதேயாகும்.
இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
குழந்தை கனவில் வந்தால், புதியதொரு விஷயத்தை அது பிரதிபலிக்கிறது என்று பொருளாகும்.
ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும், மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
தீயபலன் தரும் கனவுகள்
பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.