தேனீக்களால் ஆன வேலி!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 246
காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்கள் நாசம் என்பது போன்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்த பிரச்னைக்கு மின்சார வேலிதான் தீர்வு என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், ஆப்ரிக்காவில் கிராமத்து விவசாயிகள் இயற்கையால் இயற்கைக்கு வேலி போட முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்திருக்கின்றனர்.
யானைகளுக்கு இந்த தேனீக்களைக் கண்டால் ஆகாது. துதிக்கைக்குள்ளேயோ, காதுக்குள்ளேயோ போய் தேனீக்கள் கொட்டிவிட்டால் அந்த வேதனையை யானைகளால் தாங்க முடியாது. எனவே, கென்யாவின் கானக பகுதிகளை ஒட்டியுள்ள தோட்டப் பகுதிகளில், தேனீ வளர்ப்பு பெட்டிகளையும், தேனீக்கள் 'டம்மி' பெட்டிகளையும் தோட்டத்தின் எல்லையில் வேலிகள் போல அமைத்துக்கொள்கிறார்கள் விவசாயிகள்.
தேனீக்களின் ரீங்காரத்தைக் கேட்டதுமே அந்தப் பகுதிக்குள் வராமல் யானைகள் திரும்பிப் போய்விடுகின்றனர். கானக அதிகாரிகளையும், டிவி கேமராக் களையும் கூப்பிடவேண்டிய அவசியமே கென்ய கிராம விவசாயிகளுக்கு இல்லை! 'எலிபன்ட்ஸ் அண்ட் பீஸ்' என்ற அமைப்பு தேனீ வேலிகளை அமைத்துத் தர ஆலோசனையும், பொருட்களையும் தருகிறது. தேனீக்கள் உள்ள பெட்டிகளையும், வெற்றுப் பெட்டிகளையும் சில கம்பிகளால் இணைத்து தொடர்ச்சியாக தோட்டத்தின் எல்லையில் அமைத்து விடுகிறார்கள் விவசாயிகள்.
யானைகள் துணிந்து வந்து ஒரு பெட்டியை அசைத்தாலும், பல பெட்டிகளில் இருக்கும் தேனீக்கள் வெகுண்டு, நுாற்றுக்கணக்கில் ரீங்காரம் இடும். உடனே யானைகள் ஓட்டமெடுத்து விடுகின்றன. இந்த திட்டத்திற்கு 80 சதவீத வெற்றி வாய்ப்பு இருப்பதாக இத்திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பு சொல்கிறது. நுாறு மீட்டர் உள்ள தேனீ வேலிக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
ஆனால், இதன் உபரி பலனாக, தேன் மற்றும் மெழுகு போன்ற பொருட்கள் விவசாயி களுக்கு கிடைக்கிறது. தவிர, பயிர் களுக்கான அயல் மகரந்த சேர்க்கை, வேலித் தேனீக்களால் வேகமாக நடக்கிறது. விளைச்சலும் அமோகமாக கிடைக்கிறது.