தவிர்க்கக் கூடியதே தற்கொலைகள்!
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 230
மனம் விட்டுப் பேசுங்கள்!
‘‘தற்கொலையை தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. நாம் நினைத்தால் நமக்கு நெருக்கமான வட்டத்தில் உயிரிழப்பைத் தடுக்க முடியும்’’ உறுதியாக. ‘‘கடந்த 20 வருடங்களில் தற்கொலை விகிதம் நாட்டில் அதிகமாகி இருக்கிறது. வெளிப்படையாகப் பார்த்தால் தேர்வு பயம், காதல் தோல்வி, தொழில் நஷ்டம், குடும்பத் தகராறு என்று ஒற்றை காரணம் சொன்னாலும், ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால்தான் தற்கொலைகள் நடக்கின்றன. இதை Bio, psycho, social problem என்று வகைப்படுத்துகிறோம்.
அதாவது, உடல்ரீதியான பிரச்னைகள், மன நலப் பிரச்னைகள், போதைப்பழக்கங்கள், சுற்றுப்புறச்சூழலான சமூக, குடும்ப உறவுகளில் ஏற்படும் தகராறுகள், பணப்பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் தற்கொலை மரணங்கள் நடக்கின்றன. முக்கியமாக, ‘எல்லா வழிகளுமே அடைக்கப்பட்டு விட்டன’ என்று நினைப்பவர்கள், ‘இனி ஒன்றும் செய்வதற்கு வழியில்லை’ என்று தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
உணர்வுகளை புரிந்துகொள்ள யாரும் இல்லை என்கிற காரணத்தால்தான் தற்கொலை மரணங்கள் நிகழ்கின்றன. நாங்கள் அவர்கள் மனதின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் வேலையைத்தான் செய்து வருகிறோம். அவர்களின் பேச்சில் குறுக்கிடுவதோ, அறிவுரை சொல்வதோ கிடையாது.
பொறுமையாக அவர்களின் துயரங்களை கேட்டுக் கொள்கிறோம். இன்றைய அவசர வாழ்வில் ஒருவர் சொல்வதைக் கேட்பதற்கு இன்னொருவருக்கு நேரம் இல்லை. யாராவது ஒருவர் மனம் கசந்து உங்களிடம் பேசினால், அவர் சொல்வதைப் பொறுமையுடன் கவனியுங்கள். அவர்களை காயப்படுத்தாமல் ஆலோசனை சொல்லுங்கள். இப்படி மனம் விட்டுப் பேசினாலே நிறைய தற்கொலைகளை தடுக்க முடியும்’’
‘சுற்றும் வரை பூமி
சுடும் வரை நெருப்பு
போராடும் வரைதான் மனிதன்’
- வைரமுத்துவின் கவிதை வரிகளே நினைவுக்கு வருகிறது. ஆம்... நாம் மனிதர்கள்!