உளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கப்படுகின்ற வீதம் எமது நாட்டில் அதிகரிப்பு.
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 389
இன்று எமது நாட்டில் உளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கப்படுகின்ற வீதம் அதிகரித்து வருகின்றது. இதற்கு பல காரணங்கள் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன, அதில் ஒன்றுதான் தமது முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாது பிறரின் முன்னேற்றம் பற்றி கவலைப்படுவது. இது இன்று எம் இளைஞர்கள் மத்தியில் பிடித்திருக்கின்ற உளவியல் நோயாக இணங்கானப்பட்டுள்ளது எப்போது நாம் பிறரையும் முன்னேற்றி தாமும் முன்னேறுகின்றோமோ அப்போதுதான் எம்மால் வெற்றியின் இலக்கை அடைய முடியும்.
இன்று எமது நாட்டில் அரசாங்கத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட உளவளத்துணையாளர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் சமூக சேவை அமைச்சிலும், சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சிலும் இன்று நாடு பூராகவும் உள்ள பிரதேச காரியாலயங்களில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தவிர்ந்த எவரையும் அரசாங்கம் இந்த நாட்டில் உளவளத்துணையாளர்களாக நியமிக்கவில்லை. எனவே மாணவர்களாகட்டும், இளைஞர்களாகட்டும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகட்டும் அவர்களுக்கான ஆலோசனைகள் வழிகாட்டலை சட்டரீதியாக அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட உளவளத்துணையாளர்களிடமிருந்து நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.