உங்க உள்தொடை கருப்பா அசிங்கமா இருக்கா? அப்ப 'இந்த' 4 பொருள யூஸ் பண்ணுங்க... வெள்ளையாகிடுமாம்!
- Fathima Zahrah
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 83
பெரும்பாலும் நம் உள்தொடைகள் பற்றி நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை. தோல் உரசுதல் மற்றும் சூரிய வெளிப்பாட்டின் காரணமாக உள்தொடைகள் கருமை நிறமாக தோற்றமளிக்கலாம்.
வறண்ட அல்லது அதிகப்படியான ஈரமான சருமம் மற்றும் வறண்ட தோல் ஆகியவை உள் தொடைகளில் கருமையாக இருப்பதற்கு சில பொதுவான காரணங்களாகும். சில நேரங்களில் எரிச்சலூட்டும் கருமையான திட்டுகளால் உங்கள் உள் தொடைகள் பாதிக்கப்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இதற்கு வெட்கமோ, கூச்சமோ பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் நீங்கள் உள்தொடையை பிரகாசமாக்க விரும்பினால், சில இயற்கையான வழிகளை பின்பற்றலாம். இயற்கையாகவே உங்கள் உள் தொடைகளை ஒளிரச் செய்ய என்ன செய்யலாம் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது. இது கருமையான திட்டுகளை ஒளிரச் செய்வதில் மந்திரம் போல செயல்படும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது. புதிய எலுமிச்சை சாற்றை பிழிந்து, கருமையான பகுதிகளில் தடவ வேண்டும். அதை சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
வாரத்திற்கு சில முறை இதைச் செய்யுங்கள். ஆனால் உடனடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் எலுமிச்சை சாறு உங்கள் சருமத்தை புற ஊதா கதிர்களுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றலாம். இதனால், எரிச்சலை நீங்கள் அனுபவிக்கலாம்.
அலோ வேரா ஜெல்
கற்றாழை வெயிலுக்கு மட்டும் அல்ல; இது உங்கள் உள் தொடைகளில் உள்ள கருமை மற்றும் எரிச்சலைக் குறைக்கவும் உதவும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தமான கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துங்கள். 30 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அலோ வேரா மென்மையானது மற்றும் நெருக்கமான பகுதிகளுக்கு பாதுகாப்பானது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் இயற்கை என்சைம்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. அவை கரும்புள்ளிகளை போக்கி, உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும். உருளைக்கிழங்கை அரைத்து, சாற்றை உங்கள் உள் தொடைகளில் தடவ வேண்டும். அதை 15-20 நிமிடங்கள் விட்டு, பின்னர் தண்ணீரில் கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு இந்த செயல்முறையை தொடர்ந்து செய்ய வேண்டும்.
தயிர் மற்றும் தேன் சேர்க்கை
தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது இறந்த சரும செல்களை வெளியேற்ற உதவுகிறது, தேன் ஒரு இயற்கை ஈரப்பதமூட்டும் முகவர். அதாவது, உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. தேன் மற்றும் தயிரை சம பாகங்களில் எடுத்து, ஒன்றாக கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். பேஸ்ட்டை உங்கள் உள் தொடைகளில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
நெருக்கமான பகுதிகளுக்கு இது பாதுகாப்பானதா?
இந்த வைத்தியங்கள் அனைத்தும் உங்கள் உள் தொடைகள் மற்றும் நெருக்கமான பகுதிகளில் பயன்படுத்த பாதுகாப்பானவை. இருப்பினும், உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய அல்லது எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு தீர்வுகளையும் தவிர்க்க மறக்காதீர்கள். இந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு முதலில் பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள்.
இறுதிக்குறிப்பு:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வைத்தியங்களை முயற்சிக்கும் முன், தனிப்பட்ட தோல் வகைகள் வித்தியாசமாக செயல்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒவ்வாமை அல்லது பாதகமான எதிர்வினைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த எப்போதும் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.