Switch Language:   English | தமிழ்

    நோயாளி வயிற்றில் மலைப் பாம்பு உருவில் பெருங்குடல்

    நோயாளி ஒருவரின் வயிற்றில் மலைப் பாம்பின் உருவில் சுருண்டு காணப்பட்ட பெருங்குடல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது இச்சம்வம் நேற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.   
     நான்கு மணித்தியாலம் சத்திர சிகிச்சை மேற்கொண்டு அந்த மலைப் பாம்பின் உருவில் காட்சியளித்த ராட்சத பெருங்குடலை இறைவனின் உதவியால் வெற்றிகரமாக அகற்றி அவரை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளோம் என்று டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில்

    சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குறித்த நோயாளியின் வயிற்றினுள் இருந்த பெருங்குடல் மலைப் பாம்பின் உருவில் ராட்சதமாக மாறி ஆபத்தான கட்டத்தில் இருப்பதை அவதானித்து வியப்படைந்தோம் அதனை தொடர்ந்து நாம் விரைந்து செயற்பட்டு மிகவும் நுட்பமாக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு அதனை முற்றாக அகற்றினோம் எனக் குறிப்பிட்டார்.