தொப்புள்கொடி பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய திகைப்பூட்டும் உண்மைகள்!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 296
தொப்புள்கொடியில் இருந்து தான் தாய் மற்றும் பிள்ளையின் உறவு ஆரம்பிக்கிறது. தொப்புள்கொடி அறுபட்ட பிறகு தான் இவ்வுறவின் இணைப்பும், நெருக்கமும் மிகவும் அதிகமாகிறது.
தொப்புள்கொடி, நஞ்சுக்கொடி மூலமாக தான் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தாயின் உடலில் இருந்து பரிமாற்றம் செய்யப்படுகிறது. இன்றளவும் உலகில் அதிக வியப்புடன் காணப்படும் உருவாக்கம் ஓர் விந்து கருவோடு இணைந்து சிசுவாக வளர்வது தான்.
அப்படிப்பட்ட உறவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொப்புள்கொடியை பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள் பற்றி இனிக் காண்போம்…
மரபணு மற்றும் உயிரியல் ரீதியாக நஞ்சுக்கொடியின் ஒருபகுதி அம்மாவுடையது, மறுபகுதி குழந்தையுடையது ஆகும்.
கர்ப்பக் காலத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு துளி இரத்தம் கருப்பை வாயுளாக நஞ்சுக்கொடிக்கு ஊட்டச்சத்துக்கள் செல்கிறது. மேலும், அம்மாவின் இரத்தம் நேரடியாக குழந்தையுடன் கலப்பதும் கிடையாது.
நஞ்சுக்கொடி சராசரியாக 22 சென்டிமீட்டர் குறுக்களவும், 2.0-2.5 சென்டிமீட்டர் அடர்த்தியும் கொண்டிருக்கும். மேலும், நஞ்சுக்கொடியின் எடை 470 கிராம்.
நஞ்சுக்கொடி மூலம் முதன்முதலில் உருவாகும் ஹார்மோன் hCG ஆகும். இந்த ஹார்மோன் கர்ப்பகால பரிசோதனையின் போது கண்டறியப்படுகிறது.
ஒவ்வொரு கலாச்சார ரீதியில் நஞ்சுக்கொடி சார்ந்த நம்பிக்கைகள் வேறுபடுகின்றன. சிலர் புதைக்கின்றனர், சிலர் உண்கின்றனர், சிலர் அதை மருந்தாக நம்புகின்றனர்.
தொப்புள்கொடியானது சிசுவின் ஓர் அங்கமாகும். இதில், இரண்டு தமனிகளும், ஒரு நரம்பும் இருக்கும்.
தொப்புள்கொடி சராசரியாக 22 இன்ச் நீளம் இருக்கும். இது நஞ்சுக்கொடியுடன் இணைந்திருக்கும்.
தொப்புள்கொடி அறுத்த பிறகு 5-15 நாட்கள் கழித்து உருவாவது தான் தொப்புள்.