அலுவலகத்தில் பிறர் மனம் நோகாமல் வேலை வாங்குவதற்கான வழிமுறைகள் !
- admin
- Category: ஆலோசனை
- Hits: 80
அலுவலகம் என்றாலே பல்வேறு நிலையில் பணிபுரியும் ஊழியர்கள் இருப்பார்கள். அவர்கள் பணிபுரியும் நிலையை பொருத்துத்தான் அவர்களது சம்பளமும் இருக்கும். அதற்காக கீழ் நிலையில் பணிபுரிகிறர்வர்களை அடிமைபோன்றோ அல்லது அவர்களின் மீது அதிகப்படியான அதிகாரத்தையோ செலுத்தக் கூடாது. அப்படி என்றால், கீழ்நிலையில் உள்ளவர்களிடம் அவர்களின் மனம் நோகாமல் எவ்வாறு வேலை செய்ய வைப்பது என்பதைப் பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
வேலை வாங்கும் முறை :
? உங்கள் கீழ் பணிபுரிபவரிடம் இந்த வேலையை கண்டிப்பாக செய்து முடித்தே தீர வேண்டும். இந்த வேலையை முடித்துவிட்டு என்னிடம் பேசுங்கள் என்பது போன்று அதிகார தோரணைக் காட்டுகிற வார்த்தைகளை பயன்படுத்தும் பொழுது அந்த வார்த்தைகள் உங்கள் எதிரில் இருப்பவர்களின் முகத்தில் அல்லது மனதில் எது போன்ற மாற்றத்தை உண்டாக்குகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
? இந்த வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்களா அல்லது உடைந்து போகிறார்களா அல்லது கோபப்படுகிறார்களா அல்லது ஏதேனும் எதிர்செயல் ஆற்றுகிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.
? இதே வார்த்தைகளை உங்கள் மேல் அதிகாரிகள் உங்களிடம் பயன்படுத்தினால் உங்களது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதையும் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
? இதையே நீங்கள் ஒரு உதாரணத்துக்கு, ஒருவேலையை குறிப்பிட்ட குறுகிய காலத்துக்குள் செய்து முடிக்கச் சொல்ல வேண்டும்.
? மேலும் வேறு ஒருவரிடம் இந்தப்பணியை ஒப்படைக்க விருப்பம் இல்லை. இந்தப்பணியை முடிக்கின்ற திறமை உன்னிடம் மட்டுமே இருக்கிறது, முயற்சித்துப்பார் விரைவில் உன்னால் இந்த வேலையை செய்து முடிக்க முடியும் என்பது போன்ற மென்மையான வகையிலும், நம்பிக்கையூட்டுகிற வகையிலும் ஒரு வேலையை கூற வேண்டும்.
? அவர்கள் வேலையை முடித்தப்பின் அவர்களது வேலையை அங்கீகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களிடம் மீண்டும் வேலை கொடுக்கும் பொழுது ஆர்வத்துடன் பணிபுரிவார்கள்.
? சில சமயங்களில், அவர்கள் சோர்வான மனநிலையில் இருக்கும் பொழுது, அவர்களின் மேல் அக்கறைக் கொள்ள வேண்டும்.
? தவறு செய்தால் அவர்களை மன்னித்து, திருத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.