போட்டி பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 459
01. பரீட்சை மண்டபத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பதாக சமூகமளிப்பது சிறந்தது. இதனால் வீணான காலதாமத்தினையும், மனதளவில் ஏற்படும் சஞ்சலங்களையும் தவிர்க்க முடியும்.
02. பரீட்சை மண்டபத்திற்கு சென்றவுடன் உங்களது பரீட்சை சுட்டெண்ணுக்கான மண்டபம், மற்றும் உங்களுக்கான கதிரையினை முன் கூட்டியே இணங்காணுவது சிறந்தது.
03. பரீட்சை மண்டபத்திற்கு சென்றவுடன் உங்களது பழைய நண்பர்களுடன் அதிகளவு பேச்சுவார்த்தை செய்வதனை தவிர்க்கவும். அந்த நேரத்தை தயார்ப்படுத்தலுக்கு பயன்படுத்தலாம். (உங்கள் நண்பர்களை பரீட்சை நிறைவடைந்தவுடன் சந்திக்கலாம்)
04 .உங்களது அடையாள அட்டை, மற்றும் பொருத்தமான பேனா, பரீட்சை நுழைவு சீட்டு என்பவற்றில் எப்போது உங்களது கவனம் எப்பொழுதும் இருக்க வேண்டும். (தேவைப்பட்டால் மாத்திரம் பென்சில்)
05. கடிகாரம் அணிந்து செல்வது கட்டாயம். யாரும் இதனை மறக்க வேண்டாம். கடிகாரத்தில் ஒரு நிமிடம் கூட பிழையாக ஓடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்தவும்.
06. பரீட்சை ஆரம்பிக்க முன் மேலதிக தாள்கள் உங்களுக்கு வழங்கப்படும். ஒருவருக்கு ஒரு தாள் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால் நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் மேலதிக தாள்களை அவ்விடத்திலே கேட்டுப்பெற்றுக்கொள்வது கட்டாயம். இடையில் கேட்பதால் வீணான காலதாமதம்.
07. பரீட்சை மண்டபத்தில் பரீட்சை தாளில் மாத்திரம் உங்களது கவனம் இருக்கட்டும். அது உங்களுக்கும் சிறந்தது, ஏனையவர்களுக்கும் சிறந்தது.
08. கட்டுரை மற்றும் சுருக்கம் எழுத ஆரம்பிக்க முன் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தாளின் அளவினையும், கேட்கப்பட்டுள்ள சொற்களின் அளவினையும் முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ளவும், காரணம் சிலருடைய எழுத்தக்களின் அளவு பெரிதாகும் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் எண்ணிக்கையினை எழுது தாளில் போதிய இடம் இல்லாமல் போகலாம்.
09. நுண்ணறிவிற்கு விடையெழுத ஆரம்பிக்கும் பொழுது இலகுவானவைகளை மிக விரைவாக செய்து முடிப்பது உங்களது மன அழுத்தத்தினை குறைக்கும்.
10. நுண்ணறிவிற்கு விடையெழுதும் பொழுது கடினமான கணக்குகள் வந்துவிட்டால் அதனை பற்றி பெரிதாக யோசிக்க வேண்டாம். ஏனைய கணக்குகளின் மீது உங்கள் கவனம் இருக்கட்டும்.
11. நுண்ணறிவிற்கு விடையெழுதும் பொழுது எல்லா வினாக்களுக்கு விடையெழுத வேண்டும் என்ற எண்ணத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.(எல்லா வினாக்களுக்கு சரியாக விடையளிப்பது உங்களது புத்திசாலித்தனம்.) முடிந்தளவிற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட கணக்குகளை விரைவாக செய்து முடிக்க முயலுங்கள்.
12. நுண்ணறிவிற்கு விடையெழுதும் பொழுது அடிக்கடி கடிகாரத்தை பார்ப்பதனை தவிர்க்கவும், அது உங்களுக்கு வீணான மன உளைச்சலை தரும்.
13. பரீட்சை மண்டபத்தில் உங்களுடைய பரீட்சை அனுமதி சீட்டில் ஆரம்பித்திலேயே கையொப்பம் இட்டு விடவும், இடையில் போடுவதால் உங்களது எண்ணங்களில் திரிபு ஏற்படும்.
14. உங்களது சக பரீட்சார்த்திகளின் எழுத்தோட்டங்களை அவதானிப்பதனை முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ளுங்கள்.
15. விடைகளை தெளிவாக, மயக்கநிலையற்ற வகையில் எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
16. கட்டுரை எழுத ஆரம்பிக்க முன் நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள், கேட்கப்பட்ட சொற்களின் அளவுகளில், என்ன என்ன விடயங்களை கொடுக்க போகின்றீர்கள்? எல்லாவற்றையும் கொடுப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள்.
17. கட்டுரைகளில் பெரும்பாலும் நடைமுறை விடயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தி, ஆதாரங்கள் அதிகளவு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
18. பரீட்சை நேரங்களில் பத்தட்டப்படுவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். பரீட்சையில் வேகமும், மனதளவில் அமைதியும் பேணப்படுவது முக்கியமாகும்.
19. ஒரு நேரத்தில் ஒரு வினா மீது மட்டும் உங்களது எண்ணங்கள் இருக்கட்டும். ஒரு வினாவிற்கான விடையெழுதிக்கொண்டிருக்கும் பொழுது, ஏனைய வினாக்கள் அல்லது நீங்கள் எழுத தவறிய வினாக்கள் பற்றியதான உங்களது எண்ணங்களை தவிர்த்துக்கொள்ளுவது சிறந்தது.
20. வினா இலக்கங்கள் எழுதும்போது பதட்டம் வேண்டாம். மிக உன்னிப்பாக வினா இலக்கங்களை எழுதவும். பரீட்சை சுட்டெண் ஆரம்பித்திலே எழுதிக்கொள்வது சிறந்தது.